ECONOMY

கெனாங்கா அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் வசதியாக வாழ அமிருடின் நிறைய செய்துள்ளார்

10 நவம்பர் 2022, 9:15 AM
கெனாங்கா அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் வசதியாக வாழ அமிருடின் நிறைய செய்துள்ளார்
கெனாங்கா அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் வசதியாக வாழ அமிருடின் நிறைய செய்துள்ளார்

கோம்பாக், 10 நவ: டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 2008ல் மக்கள் பிரதிநிதியாக ஆனதில் இருந்து எடுத்த முயற்சியின் பலனாக, இங்குள்ள கெனாங்கா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 1,000க்கும் மேற்பட்டோர் ரிங்கிட் 12 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வசதிகளை அனுபவிக்கின்றனர்.

இந்த அடுக்கு மாடி வீடுகளுக்கான மின் தூக்கியை மேம்படுத்த 850,000 ரிங்கிட் செலவிடப்பட்டது என்று அதன் கூட்டு நிர்வாகக் குழு செயலாளர் காரிஸ் பட்ஜில்லா சாலே கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது குடியிருப்பாளர்களுக்கு உணவுகள் வழங்கியதை தவிர டத்தோ மந்திரி புசார் சாலை அமைக்க RM140,000, RM248,000 (கூரையை மாற்றவும்), RM30,000 (மண்டபத்தை மேம்படுத்தவும்) ஒப்புதல் அளித்ததாகவும் அவர் கூறினார்.

"இப்போது சுங்கை துவா என்று அழைக்கப்படும் பத்து கேவ்ஸ் மக்களின் பிரதிநிதியாக இருந்து இதுவரை டத்தோ மந்திரி புசார், அரசியல் சார்பு பாராமல், எங்கள் வாழ்க்கையை வசதியாக மாற்ற மக்களுக்கு உதவியுள்ளார்.

"அவர் ஊர் மக்களுடன் நட்டு வைத்த மாத்தா கூச்சிங் போன்ற பழ மரங்கள் காய்க்க தொடங்குகின்றன" என்று நேற்று கூறினார்.

நவம்பர் 4 ஆம் தேதி, கெனாங்கா அபார்ட்மெண்ட் உட்பட தாமான் கோம்பாக் பெர்மாயில் உள்ள மூன்று அடுக்கு மாடி குடியிருப்புகளின் அடுக்கக உரிமையை பெற்றுத் தர மாநில அரசு RM22 லட்சம் செலவை ஈடு செய்யும் என்றும் அமிருடின் அறிவித்தார்.

2005 இல் பூஜ்ஜியம்-குடிசைகள் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டது, பாங்சபுரி கெனாங்கன் 2008 இல் மக்கள் குடியேற்றப்பட்டனர். ஆனால் இப்போது வரை அடுக்கக உரிமை அல்லது ஸ்ராத்தா உரிமம் இல்லை.

கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரான அமிருடின் மற்ற நான்கு போட்டியாளர்களுக்கு எதிராக வாக்குச் சீட்டில் இரண்டாவது வேட்பாளராக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டார்.

2020 பிப்ரவரியில் புத்ராஜெயாவில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை கவிழ்க்கும் சதியில் ஈடுபட்ட ஒருவரான டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலிக்கு கடும் போட்டி வழங்குகிறார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.