ALAM SEKITAR & CUACA

கிள்ளானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 43 குடும்பங்கள் பிபிஎஸ்க்கு மாற்றப்பட்டனர்

10 நவம்பர் 2022, 8:45 AM
கிள்ளானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 43 குடும்பங்கள் பிபிஎஸ்க்கு மாற்றப்பட்டனர்

ஷா ஆலம், 10 நவ: நேற்று பிற்பகல் கனமழைக்கு பிறகு கிள்ளான், செகொலா கெபாங்சான் (எஸ்கே) ஜோஹான் செத்தியாவில் தற்காலிக தங்குமிடம் (பிபிஎஸ்) திறக்கப்பட்டது.

ஜேகேஎம் இன் பேரிடர் தகவல் இணையதளம் இன்று காலை நிலவரப்படி 141 பெரியவர்கள், 45 பிள்ளைகள் மற்றும் ஒரு கைக் குழந்தை உட்பட மொத்தம் 187 பாதிக்கப்பட்டவர்கள் இடம் மாற்றப்பட்டனர்.

நேற்று, மாலை 6 மணியளவில் கம்போங் ஜோஹான் செத்தியாவில் 200 வீடுகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில், பிற்பகலில் பெய்த கனமழையைத் தொடர்ந்து அப்பகுதியில் சில இடங்களில் நீர்மட்டம் அரை மீட்டருக்கும் அதிகமாக இருந்தது, ஆனால் சில மணி நேரங்களுக்கு பிறகு நீர்மட்டம் படிப்படியாக குறைந்து.

எவ்வாறாயினும், நோரஸாம் காமிஸ் படி, எட்டு வீடுகளில் இருந்து மொத்தம் 30 பாதிக்கப்பட்டவர்கள் பிபிஎஸ்க்கு மாற்றப்பட்ட நிலையில், வெளியேற்றும் நடவடிக்கை இன்னும் தொடர்கிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.