ALAM SEKITAR & CUACA

கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் நான்கு தற்காலிக தங்குமிடத்தில் உள்ளனர்

7 நவம்பர் 2022, 10:04 AM
கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் நான்கு தற்காலிக தங்குமிடத்தில் உள்ளனர்

கோத்தா பாரு, நவ 7: இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி கிளந்தானில் உள்ள 45 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 207 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாசிர் மாஸ் மற்றும் குவா மூசாங் மாவட்டங்களில் உள்ள நான்கு தற்காலிக தங்குமிடங்களில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பாசிர் மாஸில் தேசிய வகை (எஸ்கே) தோக் டே பள்ளியில் உள்ள பிபிஎஸிலும், குவா முசாங்கில் எஸ்கே ஜெராம் தெகோ, டேவான் செமாய் பக்தி ஃபெல்டா சிக்கு 7 மற்றும் எஸ்கே லிமாவ் கஸ்தூரி ( 1) ஆகிய பிபிஎஸிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், https://publicinfobanjir.water.gov.my/ அறிக்கையின்படி, மாநிலத்தில் உள்ள இரண்டு ஆறுகள் எச்சரிக்கை அளவை விட உயர் மட்ட அளவீடுகளை பதிவு செய்துள்ளது.

கோலா கிராயில் உள்ள சுங்கை கிளந்தான் 20.4 மீட்டர் (எச்சரிக்கை 20 மீ), மற்றும் கம்போங் தெமாங்கன், மச்சாங் 14.2 மீ (எச்சரிக்கை 14 மீ) ஆகியவை சம்பந்தப்பட்ட இரண்டு இடங்கள் ஆகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.