ECONOMY

மாநில அளவில் தீபாவளி கொண்டாட்டத்தில் தெங்கு அமீர் ஷா கலந்துக் கொண்டார்

23 அக்டோபர் 2022, 11:10 AM
மாநில அளவில் தீபாவளி கொண்டாட்டத்தில் தெங்கு அமீர் ஷா கலந்துக் கொண்டார்
மாநில அளவில் தீபாவளி கொண்டாட்டத்தில் தெங்கு அமீர் ஷா கலந்துக் கொண்டார்

கிள்ளான், 23 அக்: சிலாங்கூர் ராஜா மூடா நேற்று இரவு ஜாலான் தெங்கு கிளானாவில் நடைபெறும் மாநில அளவிலான தீபாவளி கொண்டாட்ட விழாவில் கலந்துக் கொண்டார்.

தெங்கு அமீர் ஷாவுடன் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் சமூக நலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதிராவ் ஆகியோர் இத் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

கொண்டாட்ட விழாவில் வீட்டுவசதி ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் ஹலிமி அபு பக்கர் (ஸ்ரீ செத்தியா) மற்றும் ஜமாலியா ஜமாலுடின் (பண்டார் உத்தாமா) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மலர் மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்ட சிலாங்கூர் ராஜா மூடா, தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு டூயட் ராயா வழங்கினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக தீபாவளியைக் கொண்டாடாமல் இருந்த நிலையில் இம்முறை 1000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தீபாவளியைக் கொண்டாட வந்தனர்.

பண்டார் கிள்ளான் செலாத்தானில் அமைந்துள்ள ஜாலான் தெங்கு கெலானா அல்லது லிட்டில் இந்தியா கிள்ளான் என்று அழைக்கப்படும் இது தீபாவளி நெருங்கும் ஒவ்வொரு முறையும் பிரபலமான ஷாப்பிங் தளமாகும்.

இந்த இடத்தில் உள்ள வளாகத்தில் புடவைகள், ஜவுளிகள், உலோகப் பொருட்கள், நகைகள், மசாலாப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவுகள் போன்ற இந்திய நுகர்வுக்கான பல்வேறு பொருட்கள் விற்கப்படுகின்றன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.