ECONOMY

தீபாவளியை ஒட்டி இரண்டு நாட்களுக்கு மலிவான அடிப்படைப் பொருட்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது

23 அக்டோபர் 2022, 5:14 AM
தீபாவளியை ஒட்டி இரண்டு நாட்களுக்கு மலிவான அடிப்படைப் பொருட்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது
தீபாவளியை ஒட்டி இரண்டு நாட்களுக்கு மலிவான அடிப்படைப் பொருட்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது

ஷா ஆலம், அக்.23: தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி, மாநிலம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு வரும் ஏசான் ரக்யாட் விற்பனை திட்டத்திற்கு அக்டோபர் 24 முதல் இரண்டு நாள் ஓய்வு.

வேளாண்மை வளர்ச்சி கழகம் (பிகேபிஎஸ்) ஏற்பாடு செய்த மலிவு விற்பனை அக்டோபர் 26 அன்று மேலும் ஒன்பது இடங்களில் செயல்படத் தொடங்கும்.

"தீபாவளி பண்டிகையையொட்டி, ஏசான் ரக்யாட் விற்பனை திட்டம் அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களுக்கு ஓய்வு எடுக்கும். அக்டோபர் 26 ஆம் தேதி மீண்டும் சந்திப்போம்" என்று பேஸ்புக் மூலம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இறைச்சி கோழி, முட்டை உள்ளிட்ட ஆறு பொருட்களை விற்பனை செய்கிறது.

இந்த மலிவு விற்பனையில் நடுத்தர கோழி 10.00 வெள்ளி விலையில் இறைச்சி 10.00  வெள்ளிக்கும் பி கிரேடு முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் விற்கப்படும்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விற்பனையில் மீன் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் மற்றும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

செப்டம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை 160 இடங்களை உள்ளடக்கிய 56 மாநில சட்டமன்றங்களில் நடக்கும் இந்த திட்டத்திற்கு மாநில அரசு RM1 கோடியை ஒதுக்கியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.