ECONOMY

மாநில மக்கள் நலத்  திட்டம் குறித்து எடுத்துரைக்க சமூகத் தலைவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்

15 அக்டோபர் 2022, 11:35 AM
மாநில மக்கள் நலத்  திட்டம் குறித்து எடுத்துரைக்க சமூகத் தலைவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்

சபாக் பெர்ணம், 15 அக்: இம்மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்கள் உள்ளூர் மக்களுக்கு  கொண்டு சேர்ப்பதில் ஒவ்வொரு சமூகத் தலைவரும் பங்கு வகிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

கிராமப்புற மேம்பாடு, மற்றும் பாரம்பரிய கிராமங்கள் ஆட்சிக்குழு உறுப்பினர், கிரமத் தலைவர்கள் மக்கள் நலன் திட்டங்கள் பற்றி நன்கு அறிந்திறுக்க வேண்டும், அப்படி பட்டவர்களால் மட்டுமே, அதிக குடியிருப்பாளர்களுக்கு அதை அறிமுகப்படுத்தி அதன்  மூலம்  மக்கள் பயனடைவதை உறுதி செய்ய முடியும் என்றார்.

"அவை செயல்படுத்த முடிந்தால், மாநில அரசின் கொள்கையை தொடர அவை எளிதாக உதவும். ஏனென்றால், கிராமப்புறங்களில் இதைப் பற்றி அறியாத சிலர் இருக்கிறார்கள், ”என்று போர்ஹான் அமன் ஷா கூறினார்.

நேற்றிரவு டேவான் ஸ்ரீ பெர்ணமில் சபாக் பெர்ணம் சமூகத் தலைவர்களுக்கான நல்லெண்ண விருந்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக, 95 கிராமங்களைச் சேர்ந்த செயலாளர்கள் உட்பட மொத்தம் 270 சமூகத் தலைவர்கள் இரவு விருந்தில் கலந்து கொண்டனர்.

ஈடுபட்டுள்ள கிராமங்களில், கம்போங் பாசிர் பஞ்சாங், கம்போங் சுங்கை லியாஸ், கம்போங் சுங்கை லிமாவ், கம்போங் தாலி ஆயர், கம்போங் சிம்பாங் லிமா, சுங்கை ஹாஜி டோரானி மற்றும் பாகான் நகோடா ஓமர் ஆகியவை ஆகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.