ECONOMY

ஸ்ரீ செர்டாங் சட்டமன்றம் RM300 மாதாந்திர உதவிக்காக 978 விண்ணப்பங்களைப் பெற்றது

13 அக்டோபர் 2022, 12:06 PM
ஸ்ரீ செர்டாங் சட்டமன்றம் RM300 மாதாந்திர உதவிக்காக 978 விண்ணப்பங்களைப் பெற்றது

ஷா ஆலம், அக் 13: ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற சமூக சேவை மையம் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்திற்கு (பிங்காஸ்) 978 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.

மாதாந்திர உதவிக்கான RM300 கோரிக்கை உள்ளூர் சமூகத்திடமிருந்து சாதகமான பதிலைப் பெற்றதாக மேலாளர் கூறினார்.

"மொத்தம் 674 விண்ணப்பங்கள் உதவி பெற தகுதி உடையவையாக அடையாளம் காணப்பட்டன, முன்னர் 104 பேர் அன்னையர் பரிவு உதவித் திட்டம் (கிஸ்) பெற்றவர்கள் மற்றும் மீதமுள்ளவர்கள் புதிய விண்ணப்பதாரர்கள்.

"இந்த உதவி தேவைப்படும் மற்றும் பலரை கொண்ட குடும்பங்களுக்கு ஏற்படும் பொருளாதார சுமையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று மஷிதா இஸ்மாயில் தொடர்பு கொண்டபோது கூறினார்.

இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங்கில் உள்ள 44 மக்கள் நல திட்டங்களில்  ஒரு பகுதியாக கடந்த ஜூன் மாதம் பிங்காஸ் தொடங்கப்பட்டது, இது RM10.8 கோடி நிதியை உள்ளடக்கிய 30,000 குடும்பங்களுக்கு பயனளிக்கும் திட்டமாகும்.

வருடத்திற்கு RM3,600 தொகையான பிங்காஸ் கொடுப்பனவுகள் வேவ்பே மூலம் பெறுபவருக்கு செலவு செய்வதை எளிதாக்குகின்றன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.