ECONOMY

சுகாதார அமைச்சு எச்சரிக்கை- இரண்டு துரிது மீ உணவுகளில் ( Mi Sedaap தயாரிப்புகளில்) புற்றுநோயை உண்டாக்கும் கலவை இருப்பது கண்டறியப்பட்டது

7 அக்டோபர் 2022, 1:06 PM
சுகாதார அமைச்சு எச்சரிக்கை- இரண்டு துரிது மீ உணவுகளில் ( Mi Sedaap தயாரிப்புகளில்) புற்றுநோயை உண்டாக்கும் கலவை இருப்பது கண்டறியப்பட்டது

கோலாலம்பூர், 7 அக்: இந்தோனேசியாவின் இரண்டு துரிது மீ உணவுகளில் Mi Sedaap தயாரிப்புகளில் எத்திலீன் ஆக்சைடு இருப்பது கண்டறியப்பட்டது, இது 1985 உணவு விதிமுறைகளின் அடிப்படையில் உணவில் பயன்படுத்த அனுமதிக்கப்படாத பூச்சிக்கொல்லி மருந்து ஆகும் என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

21 மே 2023 காலாவதி தேதியுடன் Mi Sedaap கொரியன் ஸ்பைசி சிக்கன் இன்ஸ்டன்ட்  நூடுல்ஸ் மற்றும் 17 மார்ச் 2023 காலாவதி தேதியுடன் Mi Sedaap கொரியன் ஸ்பைசி சூப் உடனடி நூடுல்ஸ் ஆகியவை சம்பந்தப்பட்ட தயாரிப்புகள்.

எத்திலீன் ஆக்சைடு என்பது புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன வாயு கலவை ஆகும், இது பெரும்பாலும்  பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப் படுகிறது. என்று அவர் விளக்கினார்.

"சுகாதார அமைச்சகம் சந்தையில் உள்ள தயாரிப்புகளை கண்காணிக்கும் மற்றும் நாட்டின் அனைத்து நுழைவுப்  வாயில்களிலும் ஹோல்ட், டெஸ்ட் மற்றும் ரிலீஸ் (TUL) நடவடிக்கைகளை விதிக்கும். நுகர்வோரின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய விஷயங்கள் குறித்து சுகாதார அமைச்சகம் எப்போதும் விழிப்புடன் அக்கறையுடனும் உள்ளது.

"இந்தப் பிரச்சினை தொடர்பான ஏதேனும் தகவல் அல்லது கவலைகளுக்கு, பயனர்கள் அருகிலுள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தை http://moh.spab.gov.my அல்லது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப் பிரிவின் பேஸ்புக் பக்கம் வழியாகத் தொடர்பு கொள்ளலாம்" என்று அவர் மேலும் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.