ALAM SEKITAR & CUACA

கடல் பெருக்கு: நாளை முதல் வியாழன் வரை மக்கள் கடற்கரைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

26 செப்டெம்பர் 2022, 2:45 PM
கடல் பெருக்கு: நாளை முதல் வியாழன் வரை மக்கள் கடற்கரைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

ஷா ஆலம், செப்டம்பர் 26: கடலோரப் பகுதிகளில் நாளை ஏற்பட கூடும் என எதிர்பார்க்கப்படும் உயர் கடல் பெருக்கு நிகழ்வு காரணமாக மக்கள் கடலோரப் பகுதிகளில் இருப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கெலனாங் கடற்கரை, மோரிப் பாரு கடற்கரை, மோரிப் கடற்கரை மற்றும் பத்து லாவுட் கடற்கரை ஆகியவை பொதுமக்களுக்கு மூடப்படும் என்று கோலா லங்காட் முனிசிபல் கவுன்சில் (எம்பிகேஎல்) பேஸ்புக் மூலம் அறிவித்தது.

சுனாங் கடற்கரை மற்றும் தஞ்சோங் சிப்பாட் ஜெட்டியில் எந்த நடவடிக்கையும் செப்டம்பர் 29 வரை அனுமதிக்கப்படாது.

முன்னறிவிப்பின் அடிப்படையில், செப்டம்பர் 27 ஆம் தேதி காலை 6.52 மணிக்கு 5.3 மீட்டர் உயரமும், மறுநாள் காலை 7.53 மணிக்கு 5.4 மீட்டர் உயரமும், செப்டம்பர் 29 ஆம் தேதி காலை 6.42 மணிக்கு 5.3 மீட்டர் உயரமும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.