ECONOMY

அரசு நிலத்தில், சட்ட விரோதமாக கழிவுகளை கொட்டிய, ஆறு லாரிகளை எம்பிகே பறிமுதல் செய்தது

25 செப்டெம்பர் 2022, 9:54 AM
அரசு நிலத்தில், சட்ட விரோதமாக கழிவுகளை கொட்டிய, ஆறு லாரிகளை எம்பிகே பறிமுதல் செய்தது

ஷா ஆலம், செப்டம்பர் 25: கடந்த ஏப்ரல் மாதம் முதல் போர்ட் கிள்ளான், புலாவ் இண்டா நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள தரிசு நிலங்களில் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டுவதற்கு அரசுக்கு சொந்தமான நிலத்தில் அத்துமீறி நுழைந்த 6 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவைத் தவிர, குற்றம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார்களைப் பெற்றதாக கிள்ளான் முனிசிபல் கவுன்சில் (MPK) தெரிவித்துள்ளது.

“எம்பிகேயின் உளவுத்துறையின் வாயிலாக, ஏப்ரல் முதல் செப்டம்பர் தொடக்கம் வரை அரசு நிறுவனத்திற்கு சொந்தமான புலாவ் இண்டா நெடுஞ்சாலை வரையிலான நிலத்தில் மூன்று முதல் 16 டன் வரையிலான  கொள்ளளவு கொண்ட ஆறு லாரிகள் குப்பைகளை கொட்டிய குற்றத்திற்காக பறிமுதல் செய்யப்பட்டன.

"சாலைகள், வடிகால் மற்றும் கட்டிடங்கள் சட்டம் 1974 இன் பிரிவு 70A இன் கீழ், எம்பிகே நில வேலை செயல்பாடுகளை நிறுத்துவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது," என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

சட்டத்திற்குப் புறம்பாக குப்பை கொட்டும் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள வேண்டாம் என்றும், அதற்குப் பொறுப்பான ஒவ்வொரு குற்றவாளியின் லாரியை பறிமுதல் செய்வது உட்பட அதிகபட்ச தண்டனை  விதிப்பதை உறுதி செய்வதாகவும் தனது தரப்பு நினைவூட்டியது.

எம்பிகே புகார்கள் வாட்ஸ்அப்பில் 03-3371 4404 என்ற எண்ணில் ஆக்கிரமிப்பு அல்லது தூய்மைப் பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்க பொதுமக்கள் அழைக்கப்  படுகிறார்கள்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.