ஷா ஆலம், செப்டம்பர் 22: அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள சிலாங்கூர் பட்ஜெட் 2023ல் மாநில அரசு சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்க முடியும் என மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியுசி) நம்புகிறது.
தொழிலாளர்களை அதிகம் கொண்ட மாநிலமான சிலாங்கூரின் இந்த சிறப்பு ஏற்பாடானது, தொழிலாளர்கள் மீதான மாநில அரசாங்கத்தின் பரிவின் அடையாளமாகக் கருதப்படும் என்று அதன் துணைத் தலைவர் ஷாதிரி மன்சோர் கூறினார்.
"மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் சிலாங்கூரில் அதிக தொழிற்சங்கங்கள் உள்ளன. எம்டியுசிக்கு குறைந்தபட்சம் RM500,000 ஒதுக்கீடு இருக்கும் என்று நம்புகிறேன்.
"ஒதுக்கீடு செய்யப் பட்டால், எம்டியுசி தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு பயிற்சி திட்டங்கள், சுகாதாரம் அல்லது பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்த முடியும்," என்று கோத்தா டமான்சாரா சட்டமன்றத்தின் உறுப்பினரான அவர் கூறினார்.
பேஸ்புக் மீடியா சிலாங்கூர் மற்றும் யூடியூப் சிலாங்கூர் டிவி மூலம் நேரலை பேச்சு நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்கள் போராடும் போது, தொழிலாளர்களின் அவல நிலையை பாதுகாப்பதில் சிலாங்கூர் ஒரு தலைவராக இருக்க வேண்டும் என்றார்.
"முன்னதாக முதல் சிலாங்கூர் திட்டம் (RS-1) பற்றிய விவாதத்தில் அவர் பரிந்துரைத்த படி மாநில அரசு RM1,600 குறைந்தபட்ச ஊதியத்தை செயல்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது," என்று அவர் கூறினார்.


