ECONOMY

கோவிட்-19 நோய்த் தொற்று ஐந்தாவது நாளாக 2,000க்கும் கீழ் பதிவு

14 செப்டெம்பர் 2022, 7:06 AM
கோவிட்-19 நோய்த் தொற்று ஐந்தாவது நாளாக 2,000க்கும் கீழ் பதிவு

ஷா ஆலம், செப் 14- நாட்டில் தினசரி கோவிட்-19 நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து ஐந்து நாட்களாக  2,000க்கும் கீழ் பதிவாகி வருகிறது.

நேற்று 1,942  பேர் இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட வேளையில் அவற்றில் 9 சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மூலம் பரவியவை என்று சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி 1,990 சம்பவங்களும் 10 ஆம் தேதி 1,971 சம்பவங்களும் 11 ஆம் தேதி 1,483 சம்பவங்களும் 12 ஆம் தேதி  1,847 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 48 லட்சத்து 8 ஆயிரத்து 896  ஆக உயர்ந்துள்ளது அவற்றில் 25,693 சம்பவங்கள் தீவிர பாதிப்பைக் கொண்டவையாக உள்ளன.

நேற்று மேலும் ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளன. தொற்றுநோயால் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 36,291 ஆக அதிகரித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.