கோலா சிலாங்கூர், செப்டம்பர் 13: இங்குள்ள தாமான் சுங்கை யு இண்டாவில் மலிவு விலை வீடுகள் வாங்குவதற்கு 26 வருடங்கள் காத்திருந்த பின் இப்பொழுதாவது தங்கள் வீடுகளில் குடியேற கிடைத்த வாய்ப்பிற்காக மாநில அரசுக்கு நன்றியை தெரிவிக்கின்றனர்.
53 வயதான விவசாயி முகமட் நூர் சோயோனா, இந்தத் திட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததால், இத்திட்டத்தில் வீட்டை பெறுவது கனவாக இருந்தது. நம்பிக்கை இழந்து விட்டோம். ஆனால் இன்று கனவு -நனவாகியது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார்.
[caption id="attachment_471283" align="alignright" width="330"]
முகமட் நூர் சோயோனா, 53[/caption]
"எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும்போது நான் அதை வாங்கினேன், அந்த காலகட்டத்தில் நானும் வாடகை மற்றும் வீட்டுக் கடன் என்று இரண்டுக்கும் பணம் செலுத்த வேண்டியிருந்தது.
"இது வேதனையானது, ஆனால் இந்த ஆண்டு வீடு தயாராக உள்ளது, இந்த ஆண்டு வீட்டுக் கடனும் முடிந்து விட்டது, அதனால் நான் மகிழ்ச்சியுடன் இந்த வீட்டிற்குள் நுழைய முடியும்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வழங்கிய சாவியை இன்று 10 வீட்டு உரிமையாளர்களுடன் முகமட் நூரும் பெற்றுக்கொண்டார்.
இதற்கிடையில், 28 வயதான வி ஷாமினி, தனக்கு இரண்டு வயதாக இருந்தபோது மறைந்த தந்தை வாங்கிய வீடு இறுதியாக கிடைத்ததைக் கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
[caption id="attachment_471282" align="alignleft" width="314"]
வி ஷாமினி, 28[/caption]
"இது முடிந்ததால் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் என் தந்தை இந்த வீட்டைப் பார்க்க முடியாததால் எனக்கு வருத்தமாக இருக்கிறது, அவர் உண்மையில் இங்கே வாழ விரும்பினார், ஆனால் அவர் 2009 இல் இறந்தார்.
"எங்கள் குடும்பத்திற்கு விஷயங்களை எளிதாக்க உதவிய மாநில அரசுக்கு நன்றி," என்று அவர் கூறினார்.


