ECONOMY

மானிய கழிவு விலை டீசல் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் கைது செய்தனர்

6 செப்டெம்பர் 2022, 9:24 AM
மானிய கழிவு விலை டீசல் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் கைது செய்தனர்

ஜோகூர் பாரு, செப் 6- மானிய கழிவு விலை டீசல் வாங்கியதில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 42 வயதான உள்ளூர் நபரை, ஜாலான் ஹரிமாவ், தாமான் அபாட் என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் போலீசார் நேற்று கைது செய்ததாக கமருல் ஜமான் கூறினார்.

அதிகாலை 2 மணிக்கு நடத்தப்பட்ட சோதனையில் மானிய கழிவு விலை டீசல் ஏற்றி வந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

முப்பது நிமிடங்களுக்குப் பிறகு, 29 வயதுடைய மற்றொரு நபரை இங்குள்ள தாமான் உங்கு துன் அமினாவில் கைது செய்து, மானிய கழிவு விலை எரிபொருள் பரிவர்த்தனை வழி ஈட்டப்பட்டதாக நம்பப்படும் RM17,722 பணத்தைக் கைப்பற்றியது.

“இரு நபர்களும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக முந்தைய குற்றப் பதிவுகளை கொண்டிருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காலை 11.20 மணியளவில் ஜாலான் பெலாத்தியில் உள்ள மற்றொரு மானிய விலை டீசல் சேமிப்பகத்தை போலீசார் சோதனை செய்தனர்.

"26 முதல் 34 வயதுடைய மூன்று வெளிநாட்டினரையும் போலீசார் கைது செய்தனர் மற்றும் RM159.722 மதிப்புள்ள 46,000 லிட்டர் டீசல், ஒரு லாரி மற்றும் ரசீது ஆகியவற்றைக் கைப்பற்றினர்," என்று அவர் மேலும் கூறினார்.

1961 ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் பிரிவு 21 இன் கீழ் மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர்கள் உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.