ECONOMY

மாநிலத்திலுள்ள 14 சிறப்பு குழந்தைகள் செப்டம்பர் 1ம் தேதி முதல் மாநில சிறப்பு பாலர்பள்ளிகளில் கற்கத் தொடங்குகின்றனர்

17 ஆகஸ்ட் 2022, 9:01 AM
மாநிலத்திலுள்ள 14 சிறப்பு குழந்தைகள் செப்டம்பர் 1ம் தேதி முதல் மாநில சிறப்பு பாலர்பள்ளிகளில் கற்கத் தொடங்குகின்றனர்

ஷா ஆலம், ஆகஸ்ட் 17: ஆகஸ்ட் 6 அன்று நடைபெற்ற சிலாங்கூர் சிறப்புக் குழந்தைகளுக்கான பாலர் பள்ளியில் (அனிஸ்) சேர்க்கைக்கான முதல் கட்ட தேர்வில் சிறப்புத் தேவையுடைய 100 சிறுவர்களில் 14 பேர் தேர்ச்சி பெற்றனர்.

அனிஸ் துறைத் தலைவர் டேனியல் அல் ரஷீட் ஹரோன் கூறுகையில், செப்டம்பர் 1 ஆம்  தேதி இங்குள்ள செக்சன் 7 இல் அமைந்துள்ள ஆதரவு மையத்தில் ஐந்து முதல் ஏழு வயது வரையிலான சிறுவர்கள் கற்றல் அமர்வுகளை ஆரம்பித்தனர்.

"சம்பந்தப்பட்ட சிறுவர்கள், எழுத்துக்கள் மற்றும் எண்களை அடையாளம் கண்டு எழுதும்  திறன் உட்பட, நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களை கடந்து பாலர் பள்ளியில் நுழைவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

"அவர்கள் ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரையிலும் காலை 8.30 மணி முதல் மதியம்  12.30 மணி வரை தலையீட்டு வகுப்புகளில் கலந்து கொள்வார்கள், அதே நேரத்தில் முன்னேற்றம் மற்றும் செயல்திறன் அறிக்கைகள் பள்ளி அமர்வின் நடுவிலும் முடிவிலும் பெறப்படும்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இதற்கிடையில், முதல் கட்ட பரிசோதனையில் தோல்வியுற்ற மீதமுள்ள சிறுவர்களின் மதிப்பீட்டை தனது தரப்பு நடத்தும், அதன்பின் 80 பேரின் ஒதுக்கீடு பூர்த்தி செய்யப்படும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர், கற்றல் சிக்கல்களை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் மற்றும் வசதிகளை வழங்குவதற்கு பள்ளி உருவாக்கப்பட்டதாக கூறினார்..

இந்த முயற்சி குறிப்பாக ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம், கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி (ADHD) மற்றும் வளர்ச்சி தாமதம் (GDD) உள்ள குழந்தைகளுக்கானது என்று டாக்டர் சித்தி மரியா மாமூட் கருத்து தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.