ECONOMY

மீன்பிடிக்கச் சென்றபோது முதலையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது

31 ஜூலை 2022, 7:15 AM
மீன்பிடிக்கச் சென்றபோது முதலையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது

கினாபாத்தாங்கன், ஜூலை 31: இங்குள்ள கினாபாத்தாங்கன் நகரின் கம்போங் தஞ்சோங் புலாட் சினார் ஜெயா ஆற்றங்கரையில் நேற்று மதியம் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது முதலையால் தாக்கப் பட்டதாக நம்பப்படும் பெண் சடலமாக மீட்கப்பட்டார்.

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) சபாவின் அறிக்கையின்படி, நோர்சிலா சயோங், 32 என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட நபர் கடைசியாக காணவில்லை என தெரிவிக்கப் பட்ட இடத்திலிருந்து 800 மீ தொலைவில் இன்று காலை 6.53 மணியளவில் மீட்புக் குழுவினர் மற்றும் கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்டார்.

ஜேபிபிஎம் க்கு நேற்று மாலை 3.42 மணியளவில் காணாமல் போனவர் குறித்து அவசர அழைப்பு வந்தது, கினாபாத்தாங்கன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஐந்து பேர் கொண்ட குழு நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பாதிக்கப்பட்டவர் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கினாபாத்தாங்கன் ஆற்றுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த ஆற்றுப் பகுதியானது, நீர் பெருகும் போது மீன் பிடிக்கும் இடமாகும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.