ALAM SEKITAR & CUACA

பாலிங்கில் மீண்டும் திடீர் வெள்ளம்; ஏழு குடும்பங்கள் தற்காலிக நிவாரண மையங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்

29 ஜூலை 2022, 6:09 AM
பாலிங்கில் மீண்டும் திடீர் வெள்ளம்; ஏழு குடும்பங்கள் தற்காலிக நிவாரண மையங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்

அலோர்ஸ்டார், ஜூலை 29 - நேற்றிரவு பாலிங்கில் இரண்டு கிராமங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை அடுத்து, ஏழு குடும்பங்கள் தற்காலிக நிவாரண மையத்தில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டனர்.

குடிமைத் தற்காப்புப் படை (ஏபிஎம்) மாவட்ட அதிகாரி கேப்டன் ரசிடா காசிம் கூறுகையில், குபாங் துணை மாவட்டத்தில் உள்ள கம்போங் இபோய் மற்றும் கம்போங் பாடாங் ஆகிய இரண்டு கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏழு குடும்பங்கள் ஹாஜி ஹசன் சமா ஹால் நிவாரண மையத்தில் வைக்கப்பட்டனர், நேற்று (ஜூலை 28) பிற்பகல் பெய்த கனமழையைத் தொடர்ந்து அவர்களது வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியதை அடுத்து இரவு 9 மணியளவில் திறக்கப்பட்டது.

"இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படவில்லை," என்று அவர் நேற்றிரவு ஒரு அறிக்கையில் கூறினார்.

மதியம் 2 மணிக்குத் தொடங்கிய கனமழை மூன்று மணி நேரம் தொடர்ந்தது, இதனால் சுங்கை குபாங் ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களின் குடியிருப்புகளுக்குள் நீர் நிரம்பி வழிகிறது.

ஏபிஎம் க்கு மாலை 5 மணியளவில் திடீர் வெள்ளம் பற்றிய அறிக்கை கிடைத்ததாகவும், சம்பவ இடத்திற்கு பணியாளர்களைத் திரட்டிய பிறகு, பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதை கண்டறிந்த தாகவும் அவர் கூறினார்.

சுங்கை குபாங்கின் நீர்மட்டம் கம்போங் இபோயில் உள்ள பெய்லி பாலத்தையும் தாண்டிவிட்டதாக ரசிடா கூறினார், இதனால் பாலத்தை தற்காலிகமாக மூடுமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

ஆற்றங்கரையோரம் வசிப்பவர்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தால் வீடுகளை விட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

ஏபிஎம் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் அப்பகுதியின் நிலைமையை அவ்வப்போது தொடர்ந்து கண்காணிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.