ECONOMY

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தகங்கள், பள்ளி உபகரணங்கள் உதவி தேவை

22 ஜூலை 2022, 4:52 AM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தகங்கள், பள்ளி உபகரணங்கள் உதவி தேவை

பாலிங், ஜூலை 22: இந்த மாத தொடக்கத்தில் பள்ளி புத்தகங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் தேவைப்படுகிறது.

வீட்டுவசதி ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறுகையில், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உதவி கிடைக்கவில்லை என்றும், அவர்கள் பள்ளி பாடம் விட்டு போய்விடுமோ என்று கவலைப்படுவதாகவும் புகார் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட பிரிவுகள் உடனடியாக அந்த உதவியை வழங்குமென நம்புகிறேன்.

"வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் வாழும்  அனைவரையும் பாதித்தது, உண்மையில் படுக்கைகள் மற்றும் சமையல் பாத்திரங்கள் போன்ற உபகரணங்கள் இந்த நேரத்தில் முக்கியம், ஆனால் குழந்தைகளின் கல்வியை புறக்கணிக்க முடியாது," என்று அவர் கூறினார்.

RM100 பண நன்கொடை, மெத்தைகள், போர்வைகள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் கிராம அபிவிருத்தி ஆட்சிக்குழு உறுப்பினர் போர்ஹான் அமான் ஷாவினால் வழங்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.