பாடாங் புசார், ஜூலை 22: அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக சமையல் எண்ணெய் சப்ளை செய்ததாகக் கண்டறியப்பட்டதால், 41 வயதான சப்ளையர் ஒருவர் RM10 லட்சம் வரை அபராதம் எதிர்கொள்கிறார்.
பெர்லிஸ் காவல்துறைத் தலைவர் டத்தோ சுரினா சாட் கூறுகையில், உளவுத்துறையின் தகவலின் பேரில், கம்போங் பாரு பாடாங் பெசாரில் உள்ள சமையல் எண்ணெய் சப்ளையர் வளாகத்தில் இன்று காலை 9 மணியளவில் போலீஸார் சோதனை நடத்தினர்.
"சப்ளையர் மொத்தம் 92.16 டன்கள் (92,156 கிலோகிராம்கள்) 5 லிட்டர் பாட்டில் சமையல் எண்ணெயை வைத்திருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது, அதே நேரத்தில் அதிகபட்சமாக 80 டன்கள் (80,000 கிலோகிராம்கள்) மட்டுமே வைத்திருக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.’’ என்று அவர் பாடாங் புபுசார் காவல்துறை தலைமையகத்தில் (IPD) செய்தியாளர்களிடம் கூறினார்.
RM48,800 மதிப்பிலான அனுமதிக்கப்பட்ட வரம்பிற்கு மேல் 12 டன்கள் (12,156 கிலோகிராம்கள்) சமையல் எண்ணெயை போலீசார் கைப்பற்றியதாக அவர் கூறினார்.
சப்ளை கட்டுப்பாடு சட்டம் 1961 இன் விதிமுறை 13 (1) மற்றும் விநியோக கட்டுப்பாடு விதிகள் 1974 இன் விதிமுறை 10 (1) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், குற்றத்திற்கான தண்டனை அதிகபட்சமாக RM10 லட்சம் அபராதம் அல்லது மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை என்றும் சுரினா கூறினார்.
வழக்கு சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தேக நபர்கள் மேல் நடவடிக்கைக்காக உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்திடம் (KPDNHEP) ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.








