ECONOMY

கெஅடிலான் தலைமைத்துவத்தில் சுமார் 30 விழுக்காட்டு மகளிருக்கு வாய்ப்பு

22 ஜூலை 2022, 4:28 AM
கெஅடிலான் தலைமைத்துவத்தில் சுமார் 30 விழுக்காட்டு மகளிருக்கு வாய்ப்பு

ஷா ஆலம், ஜூலை 22- கெஅடிலான் மத்திய தலைமைத்துவ மன்றத்தில் நியமன உறுப்பினர்கள் உள்பட மகளிரின் எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளதை கட்சி மகளிர்ப் பிரிவின் புதிய துணைத் தலைவி ஜூய்ரியா ஜூல்கிப்ளி வரவேற்றுள்ளார்.

மத்திய தலைமைத்துவ மன்றத்தில் (எம்.பி.பி.) 10 பேர் அல்லது 27 விழுக்காட்டினர் தேர்வு பெற்றுள்ள வேளையில் நியமனப் பதவியில் இரு பெண்களுக்கு அதாவது நுருள் இஸா அன்வார் மற்று சரஸ்வதி கந்தசாமி ஆகியோருக்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

கெஅடிலான் கட்சி வரலாற்றில் முதன் முறையாக இரு பெண்களை உதவித் தலைவர் பதவிக்கு நியமிக்கும் தைரியமான முடிவை கட்சித் தலைமைத்துவம் ஆக்ககரமான முறையில் மேற்கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

கட்சியின் அடிமட்ட நிலையில் மட்டுமின்றி உயர்மட்ட அளவிலும் மகளிருக்கு உரிய வாய்ப்பினை அளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நியமனம் அமைகிறது என்று அவர் குறப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.