ECONOMY

சிலாங்கூரில் கோழி, முட்டை விநியோகம் போதுமானது; விலை ஏற்றம் பற்றிய புகார்கள் எதுவும் இல்லை

20 ஜூலை 2022, 9:27 AM
சிலாங்கூரில் கோழி, முட்டை விநியோகம் போதுமானது; விலை ஏற்றம் பற்றிய புகார்கள் எதுவும் இல்லை

ஷா ஆலம், ஜூலை 20 - சிலாங்கூரில் கோழி, முட்டை மற்றும் சமையல் எண்ணெய் விநியோகம் போதுமானதாக மற்றும் நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்று சிலாங்கூர் உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் (KPDNHEP) தெரிவித்துள்ளது.

அடிப்படைப் பொருட்களின் விநியோகம் தொடர்பாக இன்று மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஆய்வு நடவடிக்கையில், எந்தவொரு வர்த்தகர்களும் அல்லது விற்பனையாளர்களும் நிர்ணயிக்கப்பட்ட நிலையான விலைக்கு மேல் இந்தப் பொருட்களை விற்பனை செய்வதில்லை என அமைச்சு தெரிவித்துள்ளது.

“நல்ல வணிக நெறிமுறைகளை எப்போதும் கடைபிடிக்குமாறுவர்த்தகர்களுக்கு நாங்கள் நினைவூட்டுகிறோம். சட்டத்தை கடைபிடிக்கத் தவறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று KPDNHEP பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, சிலாங்கூர் KPDNHEP சுபாங் ஜெயா, காஜாங் மற்றும் கோலா குபு பாருவில் பல  பகுதிகளில் ஒரே நேரத்தில் Ops ATM (கோழி, கோழி முட்டை மற்றும் சமையல் எண்ணெய்) சோதனைகளை நடத்தியது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.