ECONOMY

கோவிட்-19 நோய்ப் பரவல் மீண்டும் அதிகரிப்பு- நேற்று 3,561 பேர் பாதிப்பு

7 ஜூலை 2022, 4:43 AM
கோவிட்-19 நோய்ப் பரவல் மீண்டும் அதிகரிப்பு- நேற்று 3,561 பேர் பாதிப்பு

ஷா ஆலம், ஜூலை 7- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை மீண்டும் மூவாயிரத்தைத் தாண்டியது. நேற்று இந்நோய்க்கு 3,561 பேர் இலக்கானார்கள்.

நேற்றைய தொற்றுகளில் 3,552 உள்நாட்டினர் மூலமாகவும் 9 வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலமாகவும் பரவியதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

புதிய தொற்றுகளுடன் சேர்த்து கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 45 லட்சத்து 82 ஆயிரத்து 302 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,932 ஆகவும் நேற்று முன்தினம் 1,918 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பதிவான தொற்றுகளுடன் சேர்ந்து கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45 லட்சத்து 58 ஆயிரத்து 558 பேராக உயர்ந்துள்ளது.

ஆகக் கடைசியாக் கடந்த மே மாதம் 13 ஆம் தேதி மூவாயிரத்திற்கும் அதிகமான சம்பவங்கள் பதிவான. அன்றைய தினம் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,092 ஆக இருந்தது.

ஒமிக்ரோன் நோய்த் தொற்றின் துணை திரிபுகளான பிஏ.4 மற்றும் பிஏ.5 ஆகியவை வெகு விரைவாக பரவுவதால் கோவிட்-19 நோய்த் தொற்று விஷயத்தில் இனியும் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் பொது மக்களுக்கு நினைவுறுத்தியிருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.