ECONOMY

பொருட்களின் விலை அதிகமாக உயர்த்தப்பட்டு இருந்தால் உடனடியாக புகார் செய்யுங்கள்

4 ஜூலை 2022, 9:42 AM
பொருட்களின் விலை அதிகமாக உயர்த்தப்பட்டு இருந்தால் உடனடியாக புகார் செய்யுங்கள்

ஷா ஆலம், ஜூலை 4: பொருட்களின் விலையில் அதிகமான அதிகரிப்பைக் கண்டறிந்தால், நுகர்வோர் உடனடியாக சிலாங்கூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்திற்கு (KPDNHEP) புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் ஹலால் தொழில் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி  அகமது முக்னி, மின்னஞ்சல், செய்திகள், வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்கள் மூலம் புகார்களை அனுப்பலாம் என்றார்.

"KPDNHEP சிலாங்கூர் ஒவ்வொரு மாவட்டத்திலும் புகார்களைப் பெறும் பகுதிகளுக்குச் சென்று எப்போதும் கண்காணிக்கிறது," என்று அவர் இன்று இங்குள்ள இஸ்லாமிய விரிவுரை மற்றும் முசகாரா மண்டபத்தில்  ஹலால் குர்பானை வலுப்படுத்தும்  கருத்தரங்கை நடத்திய பிறகு தெரிவித்தார்.

அதே சமயம், தற்போதைய சவாலான பொருளாதார சூழ்நிலையில் மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் அளவுக்கு அதிகமான லாபத்தை வியாபாரிகள் எடுக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

கடத்தல் , பதுக்கல், அதிக விலை ஏற்றம் குறித்து அல்லது புகார்கள் தொடர்பான தகவல்களைக் கொண்டுள்ள பயனிட்டாளர்கள்  அதை KPDNHEP சிலாங்கூருக்கு 019-279 4317 அல்லது 019-848 8000 என்ற எண்ணில் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பலாம்.

பொதுமக்கள் e-aduan.kpdnhep.gov.my என்ற புகார் போர்ட்டலை உலாவரலாம்,  கட்டுப்பாட்டு மையத்தை 1-800-886-800 ஐ அழைக்கலாம், e-aduan@kpdnhep.gov.my அல்லது Ez ADU KPDNHEP என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.