ECONOMY

பண பரிவர்த்தனைகள் போது பொது WIFI பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்து

16 ஜூன் 2022, 9:37 AM
பண பரிவர்த்தனைகள் போது பொது WIFI பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்து

கோலாலம்பூர், ஜூன் 16: இ-வாலட்கள் மற்றும் பிற மின்-கட்டணங்களை மேற்கொள்ளும் ஆன்லைன் பயனர்கள் பொது WIFI இணைப்புகள் மூலம் எந்தப் பரிவர்த்தனை களையும் மேற்கொள்ள வேண்டாம் என்று கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சைபர் செக்யூரிட்டி மலேசியா கிரிப்டோகிராஃபி மேம்பாட்டுத் தலைவர் ஹஸ்லின் அப்துல் ராணி கூறுகையில், பாதுகாப்பற்ற பொது WIFI மூலம் சட்டவிரோதமாக இணையத்தில் ஊடுருவுபவர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் ஏற்படுகிறது, இதன் விளைவாக தனிப்பட்ட தரவு மற்றும் அனைத்து கணக்கு தகவல் மற்றும் உள்நுழைவு சான்றுகள் பரிவர்த்தனை செயல்பாட்டின் போது  திருடப்படலாம்.

தாக்குதல் நடத்துபவர்கள் முறையான பொது WIFI நெட்வொர்க்குகளை இலகுவான  குறியாக கொள்ளும் சாத்தியக்கூறுகள் குறித்து மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் குறித்து  அவர் அறிவுறுத்தினார்.

மேலும் கருத்து தெரிவித்த ஹாஸ்லின், பயனர்கள் தொலைபேசி அழைப்புகள், மொபைல் சாதனங்களில் உள்ள செய்திகள் மற்றும் தீங்கிழைக்கும் மென்பொருள் இணைக்கப்பட்ட மின்னஞ்சல்கள் (மால்வேர்) மூலம் தங்களை குறிவைக்கும் சமூக பொறியியல் தாக்குதல்கள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.