ECONOMY

மரண தண்டனை இன்னும் உள்ளது, தீர்ப்பு வழங்கும் விருப்புரிமை நீதிபதிகளுக்கு  வழங்கப்பட்டுள்ளது - பிரதமர்

11 ஜூன் 2022, 7:23 AM
மரண தண்டனை இன்னும் உள்ளது, தீர்ப்பு வழங்கும் விருப்புரிமை நீதிபதிகளுக்கு  வழங்கப்பட்டுள்ளது - பிரதமர்

பெரா, ஜூன் 11 – நாட்டில் தூக்குத் தண்டனை அகற்றப்படவில்லை, ஒழிக்கப்படாது என்றும், நீதிபதிகளுக்கு இப்போது தண்டனை வழங்குவதில் விருப்புரிமை வழங்கப்படுவதால் மட்டுமே மாற்றம் ஏற்படும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று விளக்கினார்.

கட்டாய மரண தண்டனையை ரத்து செய்வதற்கும், நீதிமன்றம் விருப்பத்திற்கு உட்பட்ட பிற தண்டனைகளை வழங்குவதற்கு அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக பிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) டத்தோஸ்ரீ வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் முன்பு கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறினார்.

இனி அந்த "கட்டாயம்" என்ற வார்த்தைக்கு நீதிபதிகள் கட்டுப்பட தேவையில்லை என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.

"எல்லோரும் இரண்டாவது வாய்ப்புக்கு தகுதியானவர்கள் என்று நாங்கள் கருதுகிறோம். அதுவே, கடுமையான போதைப்பொருள் கடத்தி பலர் உயிரிழக்க காரணமாக இருக்கும் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட அனுமதிக்கப்படலாம்.

"இருப்பினும், நீதிபதி, தனது விருப்பப்படி, குற்றவாளிக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கருதினால், குற்றவாளிக்கு சவுக்கடியுடன் ஆயுள் தண்டனை விதிக்க முடிவு செய்தால், அவர் கட்டாய மரணத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றலாம்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.