ECONOMY

மாநில அரசின் பரிவுமிக்க விற்பனை திட்டத்தில் முட்டை, அரிசி, சமையல் எண்ணெய் ஆகியவை அதிக விற்பனையாகிறது

8 ஜூன் 2022, 4:37 AM
மாநில அரசின் பரிவுமிக்க விற்பனை திட்டத்தில் முட்டை, அரிசி, சமையல் எண்ணெய் ஆகியவை அதிக விற்பனையாகிறது

ஷா ஆலம், ஜூன் 8: கடந்த சனிக்கிழமை பெட்டாலிங் ஜெயாவின் தாமான் மேடானில் நடந்த மாநில அரசின் பரிவுமிக்க விற்பனை திட்டத்தில் முட்டை, அரிசி மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை அதிகம் விற்பனையான பொருட்களாக இருந்தன.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையான விற்பனையின் போது 100 முட்டைக் அட்டைகள், 50 மூட்டை அரிசி மற்றும் 200 சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் (பிகேபிஎஸ்) தெரிவித்துள்ளது.

"சுற்றுப்புற குடியிருப்பாளர்கள் நியாயமான விலையில் விற்கப்படும் மீன், இறைச்சி, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற பிற அன்றாடத் தேவைகளை வழங்குவதற்கான வாய்ப்பை பயன்படுத்தியது மிகவும் ஊக்கமளிக்கிறது.

"மாநில அரசின் பரிவுமிக்க விற்பனை திட்டத்திற்கான அடுத்த இடம் கம்போங் தாசிக் பெர்மாய், அம்பாங் ஜூன் 11 சனிக்கிழமை" என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.