ECONOMY

சிலாங்கூர் கல்வி உதவித்தொகைக்கு ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்

7 ஜூன் 2022, 4:07 AM
சிலாங்கூர் கல்வி உதவித்தொகைக்கு ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், ஜூன் 7 - சிலாங்கூர் மாணவர்கள் ஜூன் 3 முதல் ஜூலை 31 வரை மாநில மாற்றத்தக்க கல்விக் கடன்களுக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கப் படுகிறார்கள்.

சிலாங்கூர் உதவித்தொகை குழு நிதியின் (தபுங் கும்புலன் வாங் பியாசிஸ்வா சிலாங்கூர்) கீழ் கடன்கள் வழங்கப்படுவதாக சிலாங்கூர் மாநில செயலக அலுவலகம் தெரிவித்துள்ளது.

“உங்கள் பிள்ளை படிப்பை மேற்கொண்டு வருகிறாரா? இன்னும், மாணவர் கடன்களைத் தேடுகிறீர்களா? 2022 இல் நாட்டில் படிக்க மாற்றத்தக்க கடன்களுக்கு விண்ணப்பிக்கவும்.

danapendidikan.selangor.gov.my என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைச் செய்யலாம்” என்று ஃபேஸ்புக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் அல்லது அவர்களது பெற்றோர் சிலாங்கூரில் பிறந்திருக்க வேண்டும் அல்லது 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் அல்லது மருத்துவ பட்டப்படிப்பில் முழுநேர படிப்பிற்காக பதிவு செய்யப்பட வேண்டும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.