ECONOMY

12 லட்சம் சிறார்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது

6 ஜூன் 2022, 10:20 AM
12 லட்சம் சிறார்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது

கோலாலம்பூர், ஜூன் 6: நேற்றைய நிலவரப்படி, நாட்டில் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் ஐந்து முதல் 11 வயது வரையிலான சிறார்களில் மொத்தம் 1,201,196 பேர் அல்லது 33.8 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத் தரவின் அடிப்படையில், மொத்தம் 17 லட்சத்து 33 ஆயிரத்து 501 பேர் அல்லது 48.8 விழுக்காட்டினர் தடுப்பூசியின் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயதுடைய இளையோரில், மொத்தம் 29 லட்சத்து 14 ஆயிரத்து 970 பேர் அல்லது 93.7 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் குழுவில் 30 லட்சத்து 10 ஆயிரத்து 110 பேர் அல்லது 96.8 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர்.

இதற்கிடையில், நாட்டில் மொத்தம் 1 கோடியே 61 லட்சத்து 5 ஆயிரத்து 955 பேர் அல்லது 68.5 விழுக்காட்டினர் பூஸ்டர் டோஸ் ஊசிகளைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 2 கோடியே 29 லட்சத்து 79 ஆயிரத்து 868 பேர் அல்லது 97.7 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர் மற்றும் 2 கோடியே 32 லட்சத்து 56 ஆயிரத்து 502 பேர் அல்லது 98.9 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர்.

610 முதல் டோஸ்கள், 3,068 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 576 பூஸ்டர் டோஸ்கள் என மொத்தம் 4,254 தினசரி டோஸ்கள் நேற்று வழங்கப்பட்டன, தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்) கீழ் ஒட்டுமொத்த தடுப்பூசியின் எண்ணிக்கை 7 கோடியே 9 லட்சத்து 87 ஆயிரத்து 758 ஆகக் உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சகத்தின் கிட்ஹப் போர்டல் நேற்று கோவிட் -19 காரணமாக இரண்டு இறப்புகளைப் பதிவுசெய்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.