ECONOMY

உலு சிலாங்கூர் நோன்புப் பெருநாள் உபசரிப்பில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

15 மே 2022, 11:35 AM
உலு சிலாங்கூர் நோன்புப் பெருநாள் உபசரிப்பில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

மே 15- சிலாங்கூர் மாநில அரசின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு உலு  சிலாங்கூர்,  மாவட்டத்தில் இன்று தொடங்கியது.

கோல குபு பாரு சமூக மற்றும் விளையாட்டு மையத்தில் பிற்பகல் 2.30 மணி தொடங்கி மூன்று மணி நேரத்திற்கு  நடைபெற்ற இந்த பொது உபசரிப்பில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தன் துணைவியார் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமதுவுடன் மாலை 4.15 மணியளவில் இந்நிகழ்வுக்கு வருகை புரிந்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறார்களுக்கு மந்திரி புசார் பண அன்பளிப்பை வழங்கினார்.

இந்த விருந்து நிகழ்வில் பல்வேறு வகையான உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. முஸ்லீம்கள் மட்டுமின்றி பிற இனத்தினரும் இந்த விருந்து நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.