கோலாலம்பூர்,மே 13; ஸ்தாபாக், டானாவ் கோத்தாவிலுள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றின் கழிப்பறையில் சிசுவின் கரு கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஒரு காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.இருப்த்தேழு வயதுடைய அந்த ஆடவரும் பெண்ணும் இங்குள்ள துங்கு அஜிசா மருத்துவமனை வளாகத்தில் நேற்று பின்னிரவு 12.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாக வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அஸ்ஹாரி அபு சமா கூறினார்.
கடுமையான இரத்தப் போக்கு காரணமாக சிகிச்சை பெற வந்த போது அப்பெண்ணும் ஆடவரும் கைது செய்யப்பட்டனர். பிரசவத்தை மறைத்தது மற்றும் குழந்தையின் உடலை சட்டவிரோதமான முறையில் வீசியது ஆகிய குற்றங்களின் பேரில் அவ்விருவரும் குற்றவியல் சட்டத்தின் 318 வது பிரிவின் கீழ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்தவர்கள் வங்சா மாஜூ போலீஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொள்ளும்படி அறிக்கை ஒன்றின் வாயிலாக அவர் கேட்டுக் கொண்டார்.
ECONOMY
கழிப்பறையில் சிசுவின் கரு - காதல் ஜோடியிடம் போலீஸ் விசாரணை
13 மே 2022, 4:01 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மேற்கு ஆசிய மோதல்களுக்கு இடையிலும் மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் சிலாங்கூர் அரசு
Shalini Rajamogun
22 ஜூன் 2026

national
ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டாலும் அவசரப்பட்டு முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம் - பொருளாதார நிபுணர் அறிவுறுத்தல்
Shalini Rajamogun, Suhaila Shahrul Annuar
18 ஜூன் 2026

national
மலேசியாவின் பணவீக்கம் 1.5 முதல் 2.5 விழுக்காட்டிற்குள் கட்டுப்படுத்தப்படும்; பொருளாதார அமைச்சு நம்பிக்கை
Shalini Rajamogun
15 ஜூன் 2026

selangor
பொருளாதார நெருக்கடியால் செலவினங்களைக் குறைக்க பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி நடவடிக்கை
Shalini Rajamogun, Adam Azman
13 ஜூன் 2026

வகைhealth
உங்கள் கருத்து என்ன?



