ECONOMY

ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் அடிப்படை பொருட்களின் மலிவு விற்பனை நடைபெறும்

3 மே 2022, 3:34 AM
ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் அடிப்படை பொருட்களின் மலிவு விற்பனை நடைபெறும்

உலு லங்காட், மே 2: இந்த ஹரி ராயா காலத்தில் சிலாங்கூர் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட  மாநில அரசின் பரிவுமிக்க விற்பனைத் திட்டம் ஒவ்வொரு பண்டிகைக் காலத்திலும் ஏற்பாடு செய்வதன் வழி  மக்கள்  தேவையான பொருட்களை மலிவான விலையில் வாங்க உதவும்.

விவசாய நவீனமயமாக்கல் ஆட்சிக்குழு உறுப்பினர் இஸாம் ஹஷிம் கடந்த பிப்ரவரியில் தொடங்கப்பட்ட திட்டம் மிகவும் வெற்றிகரமானதாக  விவரித்தார்.  ஒவ்வொரு இடத்திலும் நிறைய வரவேற்பைப் பெற்றது என்றார்.

ஹரி ராயா பெருநாள் கொண்டாட்டத்துடன் இணைந்து மாநிலம் முழுவதும் 29 இடங்களில் அடிப்படை பொருட்களின் பெரிய அளவிலான விற்பனை ஏப்ரல் 25 முதல் நடைபெற்றது.

23,200 புதிய கோழி, 23,200 கிலோ திட மாட்டு இறைச்சி, மாட்டிறைச்சி எலும்புகள் (16,700 கிலோ), கிரேடு பி கோழி முட்டைகள் (18,200 பலகைகள்), பாக்கெட் சமையல் எண்ணெய் (25,200 கிலோ) மற்றும் 1,500 கிலோ செலாயாங் மற்றும் கானாங்கெளுத்தி மீன் ஆகியவை வழங்கப்படும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.