ECONOMY

பண்டான்  இண்டாவின் 500  குடியிருப்பாளர்களுக்கு  இலவச  உணவுப்  பொதிகள்

25 ஏப்ரல் 2022, 5:01 AM
பண்டான்  இண்டாவின் 500  குடியிருப்பாளர்களுக்கு  இலவச  உணவுப்  பொதிகள்

அம்பாங்,  ஏப்ரல்  25:  ஹரி ராயா பெருநாளைக் கொண்டாடும், குறைந்த  வருமானம் பெரும்  500  பண்டான்  இண்டா  குடியிருப்பாளர்களுக்கு  அடிப்படைத்  தேவைகளை  சட்டமன்றம்   இலவசமாக  வழங்கும்.

அந்த  பேக்கில்  இரண்டு  கோழிகள்,  தேங்காய்ப்பால்,  நாசி  இம்பிட்  மற்றும்  சமையல்  எண்ணெய்  ஆகியவை  வைக்கப்பட்டுள்ளதாக  சட்டமன்ற  உறுப்பினர்  இஸாம்  ஹாஷிம்  தெரிவித்தார்.

“பண்டான் இண்டாவில்  வசிப்பவர்கள்  கவுன்சில்  உறுப்பினர்கள்,  கிராமத்  தலைவர்கள்  மூலம்  விண்ணப்பிக்க  வேண்டும்  அல்லது  சேவை  மையம்  மூலம்  தொடர்பு கொண்டு  விண்ணப்பிக்கலாம்.

"இந்த  வியாழக்கிழமை  விண்ணப்பம்  திறக்கப்படும், பொதிகளின்  எண்ணிக்கை  குறைவாக  உள்ளதால்    முதலில்  விண்ணப்பித்தவர்களுக்கு  முதலில் வழங்கப்படும்,"  என்று  அவர்  இன்று  கூறினார்.

இங்குள்ள  ஜாலான்  பண்டான்  இண்டாவில்,  பண்டான்  இண்டா  சட்டமன்ற   உறுப்பினர்   இப்தார்  விழாவில்   மக்களை  சந்தித்த  போதே  அவர்  இவ்வாறு  தெரிவித்தார்.

விழாவில், 500  பண்டான்  இண்டா  குடியிருப்பாளர்கள்  குறைந்த  வருமானம் பெரும்  தரப்பினர் (பி40) கலந்து  கொண்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.