ஷா ஆலம், ஏப்ரல் 16: தினசரி கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று முன் தினம் 10,413 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது 9,673 சம்பவங்களாகக் குறைந்துள்ளது என்று சுகாதார தலைமை இயக்குநர் தெரிவித்தார்.
மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தில் 48 சம்பவங்கள் அல்லது 0.5 விழுக்காடு குறைவாகவே இருந்தன, அறிகுறிகள் இல்லாத ஒன்றாம் கட்டம் மற்றும் லேசான அறிகுறிகள் கொண்ட இரண்டாம் கட்டத்தில் 9,625 சம்பவங்கள் அல்லது 99.5 விழுக்காடு என்று டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
"நேற்று சம்பவங்களின் அதிகரிப்பு மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையை 43 லட்சத்து 72 ஆயிரத்து 697 சம்பவங்களாக கொண்டுவருகிறது. மொத்தம் 113,175 சம்பவங்கள் இன்னும் செயலில் உள்ளன.
"மொத்தம் 110,385 சம்பவங்கள் வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளன, 2,281 சம்பவங்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றன, 357 சம்பவங்கள் கோவிட் -19 தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மையத்தில் (PKRC) சிகிச்சை பெற்றன," என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நேற்று மொத்தம் 14,267 பேர் குணமடைந்துள்ளனர், மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,224,125 ஆக உள்ளது.
எட்டு புதிய கிளஸ்டர்கள் கண்டறியப்பட்டதாகவும், மொத்த செயலில் உள்ள கிளஸ்டர்களின் எண்ணிக்கையை 116 ஆகக் கொண்டு வருவதாகவும் டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.
நேற்று பதிவுசெய்யப்பட்ட கட்டம் வாரியாக நோயாளிகளின் விவரம் பின்வருமாறு:
1 ஆம் கட்டம்: 5,394 சம்பவங்கள் (55.76 விழுக்காடு)
2 ஆம் கட்டம்: 4,231 சம்பவங்கள் (43.74 விழுக்காடு)
3 ஆம் கட்டம்: 21 சம்பவங்கள் (0.22 விழுக்காடு)
4 ஆம் கட்டம்: 17 சம்பவங்கள் (0.18 விழுக்காடு)
5 ஆம் கட்டம்: 10 சம்பவங்கள் (0.10 விழுக்காடு)


