ஷா ஆலம், ஏப்ரல் 16- மாநிலம் முழுவதிலுமிருந்து சுமார் 700 சமூகத் தலைவர்கள் இன்று மாலை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடன் இப்தார் விருந்தில் பங்கேற்றனர். .
சிலாங்கூர் மாநிலச் செயலகக் கட்டிடத்தில் உள்ள டேவான் ஜூப்லி பேராகில் கிராமத் தலைவர்கள் மற்றும் கவுன்சில் உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெற்றது..
மாலை 6.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கிய இந்நிகழ்வில் நாடாளு்மன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் கலந்துகொண்டார்.
நோன்பு துறப்புக்கு முன்னதாக, ஜாஹீன் பயண யாத்திரை வழிகாட்டல் தலைவர் முகமட் நிஜாம் கமருஜாமான் அவர்களால் ‘சந்தாபான் மிண்டா - ஜிவா பெகர்ஜா’ என்ற தலைப்பில் ஒரு சுருக்கமான பிரசங்கம் வழங்கப்பட்டது.
உணவைத் தொடர்ந்து, மந்திரி புசார் மற்றும் பங்கேற்பாளர்கள் தங்கள் மக்ரிப் பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.


