ALAM SEKITAR & CUACA

ஒரு மாநிலத் தொகுதிக்கு 500 பேர் என்ற இலக்குடன் இலவச மருத்துவப் பரிசோதனை மே மாதம் தொடங்கப்படும்

26 மார்ச் 2022, 3:59 AM
ஒரு மாநிலத் தொகுதிக்கு 500 பேர் என்ற இலக்குடன் இலவச மருத்துவப் பரிசோதனை மே மாதம் தொடங்கப்படும்

ஷா ஆலம், மார்ச் 26: சிலாங்கூர் ஸ்கிரீனிங் திட்டம்  இலவசச் சுகாதாரப் பரிசோதனைகளை வழங்குகிறது, இந்த மே மாதம் ஒவ்வொரு மாநிலச் சட்டமன்றத் தொகுதிக்கு 500 பங்கேற்பாளர்களை இலக்காகக் கொண்டு தொடங்கப்படுகிறது.

பொதுச் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட், இலகுவாக நோய்த்தொற்றுக்கு இலக்காகக் கூடிய பிரிவினர் மற்றும் அனாக் இஸ்திமேவா சிலாங்கூர் (அனிஸ்) பெற்றோருடன் உடல் நலிவுற்றவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றார்.

"இந்தத் திட்டத்தின் நோக்கம், நோய்க்கான ஆபத்தில் உள்ளவர்களைக் கண்டறிவதே ஆகும்.

"நோய்களை முன்கூட்டியே கண்டறிவது சிறந்த சிகிச்சை திட்டமிடலுக்கு உதவும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன, குறிப்பாகத் தொற்று அல்லாத நோய்களைத் தடுக்க," என்று அவர் சமீபத்திய பேட்டியில் கூறினார்.

ஜெலாஜா ஆரோக்கியமான சிலாங்கூர் என்ற உப குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வு இரத்தச் அழுத்தம், இரத்த சர்க்கரை மற்றும் சிறுநீர் பரிசோதனைகளை வழங்குவதாக டாக்டர் சித்தி மரியா விளக்கினார்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், மேமோகிராம் சோதனைகள் (மார்பகப் புற்றுநோய்) மற்றும் மலச் சோதனைகள் (பெருங்குடல் புற்றுநோய்) ஆகியவற்றைக் கண்டறியப் பா ஸ்மியர் சோதனைகளும் செய்யப்படுகின்றன.

"கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு சிறப்பு கவுண்டருடன் கண் பரிசோதனை மற்றும் மனநலப் பரிசோதனையும் செய்யப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.