ECONOMY

விவசாயிகளுக்கு மடிக்கணினி உதவியை அரசு வழங்குகிறது, திங்கள்கிழமை வரை விண்ணப்பிக்கலாம்

22 பிப்ரவரி 2022, 11:17 AM
விவசாயிகளுக்கு மடிக்கணினி உதவியை அரசு வழங்குகிறது, திங்கள்கிழமை வரை விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், பிப் 22: மாதம் RM2,000 அல்லது அதற்கும் குறைவான வருமானம் ஈட்டும் விவசாயிகளுக்கு அக்ரோ பிரிஹாதின் திட்டத்தின் மூலம் சாதன உதவியை மாநில அரசு வழங்குகிறது.

100 மடிக்கணினிகள் மற்றும் 50 டேப்லட் என்ற மாத்திரைகள் உள்ளடக்கிய இந்தத் திட்டத்திற்கு நேற்று முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என வேளாண்மை ஆட்சிக்குழு உறுப்பினர் இஸாம் ஹஷிம் தெரிவித்தார்.

விண்ணப்பதாரர்கள் விவசாயம், மீன்பிடி, கால்நடை மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் தீவிரமாக ஈடுபட்டிருக்க வேண்டும் என்று அவர் விளக்கினார்.

"இந்த ஆண்டு வீட்டில் கற்பித்தல் மற்றும் கற்றல் அமர்வுகளை (PdPR) மேற்கொள்ளும் குடும்ப உறுப்பினர்களையும் அவர்கள் கொண்டிருக்க வேண்டும்" என்று அவர் பேஸ்புக்கில் கூறினார்.

சிலாங்கூரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த குடிமக்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை என்று இர் இஸாம் கூறினார்.

மேல் விவரங்களுக்கு infratani@gmail.com அல்லது pegawaikhasexco15@gmail.com மின்னஞ்சல் அனுப்பலாம். https://forms.gle/XA58S6GFMzmijovS7 என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பங்களைச் செய்யலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.