ஷா ஆலம், பிப் 6- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 10,081 ஆக உயர்வு கண்டது. நேற்று இந்த எண்ணிக்கை 9,117 ஆகப் பதிவாகியிருந்தது.நேற்றுடன் ஒப்பிடுகையில் 972 சம்பவங்கள் அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது.
இந்த புதிய தொற்றுடன் சேர்த்து நாட்டில் நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 14 ஆயிரத்து 220 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தனது டிவிட்டர் பதிவில் கூறினார்.
இன்று பதிவான 10,089 தொற்றுகளில் 10,012 அதாவது 99.24 விழுக்காடு ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் 77 தொற்றுகள் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான தகவல்களை https://covidnow.moh.gov.my எனும் அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
HEALTH
கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 10,089 ஆக உயர்வு
6 பிப்ரவரி 2022, 2:35 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
மலேசியாவின் ஏற்பாட்டில் 17-ஆவது ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டம்
Bernama
2 செப்டெம்பர் 2026

national
தாதியர் பற்றாக்குறை நெருக்கடி: தீர்வு காண 3 திட்டங்களை வகுத்தது சுகாதார அமைச்சு
Bernama
15 ஆகஸ்ட் 2026

வகைhealth
உங்கள் கருத்து என்ன?



