ஷா ஆலம், டிச. 7 - உணவு உற்பத்தித் திட்டத்திற்கான நிரந்தர பூங்கா உள்ளிட்ட பொருத்தமான விவசாய நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதற்காக தரிசாக இருக்கும் அரசாங்க நிலங்களை அடையாளம் காணும் முயற்சியில் சிலாங்கூர் அரசு ஈடுபட்டு வருகிறது.சிலாங்கூரில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் நிலவும் விவசாய நிலங்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக விவசாயம் சார்ந்த தொழில்துறைக்கான ஆடசிக்குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம் கூறினார்.
ஆண்டிற்கு 3 கோடியே 80 லட்சம் வெள்ளி மதிப்பிலான 11 திட்டங்களை 1,300 ஹெக்டர் நிலப்பரப்பில் விவசாயத்துறை , கால்நடைத் துறை மற்றும் மீன்வளத் துறை ஆகியவவை மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.
இருப்பினும், மாநிலத்தில் உணவு விநியோகப் பாதுகாப்பு சிக்கலைத் தீர்க்க இது போதாது. எனவே மாநில அரசு சிலாங்கூர் உருமாற்றுத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கும் விளைச்சலை அதிகரிப்பதற்கும் பொருத்தமான நிலங்களை அடையாளம் காண முடிவு செய்துள்ளது என்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் இஷாம் கூறினார்.
பயன்படுத்தப்படாத அரசாங்க நிலங்களை பொது மக்கள் விவசாய நோக்கத்திற்கு பயன்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து சிஜாங்காங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அகமட் யூனுஸ் ஹைரி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
இதற்கிடையில், விவசாய உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால், மாநிலத்திலுள்ள ஒவ்வொரு விவசாயியும் ஒன்று முதல் இரண்டு டன் வரையிலான இயற்கை உரங்களைப் பெறுவார்கள் என்று இஷாம் தெரிவித்தார்.
தங்களின் உற்பத்தி பொருள்கள் மாசுபடாமலிருப்பதை உறுதி செய்ய உயர்தர உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்தும்படி விவசாயிகளை அவர் கேட்டுக் கொண்டார்.
ECONOMY
விவசாயத் திட்டத்திற்காக தரிசு நிலங்களை சிலாங்கூர் அரசு அடையாளம் காணும்
8 டிசம்பர் 2021, 6:40 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
சிலாங்கூர் அரையாண்டு முதலீட்டு மதிப்பு RM70 பில்லியன்; சேவை, உற்பத்தித் துறைகள் முக்கிய பங்கு
Bernama
12 செப்டெம்பர் 2026

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

வகைeconomy
உங்கள் கருத்து என்ன?



