கோலாலம்பூர், நவ13- நாட்டின் கோவிட்-19 (ஆர்-நோட்) நோய்த்தொற்று விகிதம் 1.0 ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சுகாதார அமைச்சு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.ஊக்கத் தடுப்பூசி பெறுவதற்கு முன்பதிவு பெற்றவர்கள் அத்தடுப்பூசியை விரைந்து பெறுமாறு தனது டிவிட்டர் பதிவின் வழி அவர் கேட்டுக் கொண்டார்.
மூத்த குடிமக்கள் கூடுமானவரை நெரிசலான இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஆர்-நோட் மதிப்பு என்பது கோவிட்-19 நோயாளியின் தொற்று அளவைக் குறிக்கிறது, அதாவது ஒருவருக்கு ஏற்படும் நோய்த் தொற்று மூலம் எத்தனை பேர் பாதிக்கப்படலாம் என்பதை காட்டுகிறது.
இதற்கிடையில், சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தனது ட்விட்டர் பதிவில், தொற்று விகிதம் மீண்டும் அதிகரிப்பது கவலையளிக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டார்.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்திய அவர், பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் ஊக்கத் தடுப்பூசியை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
வியாழனன்று மொத்தம் 6,323 புதிய கோவிட்-19 சம்பவங்கள்பதிவு செய்யப்பட்டன. கடந்த நான்கு நாட்களாக நாட்டில் கோவிட்-19 எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.
மலேசியாவில் தினசரி கோவிட் -19 நோய்த் தொற்று எண்ணிக்கை அண்மைய காலமாக குறைந்து வந்த நிலையில் கடந்த திங்கள் முதல் நேற்று வரை மீண்டும் உயர்ந்தன.
ECONOMY
கோவிட்-19 நோய்த் தொற்று விகிதம் அதிகரிப்பு- மருத்துவமனைகளில் கண்காணிப்பு தீவிரம்
13 நவம்பர் 2021, 3:32 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருள் மற்றும் அடிப்படைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தீவிரம்
Shalini Rajamogun
10 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




