கோலாலம்பூர் நவ 4-- நாட்டில் நேற்றிரவு 11.59 மணி நிலவரப்படி மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 9 ஆயிரத்து 335 பேர் அல்லது 95.7 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.மேலும், 97.8 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 28 லட்சத்து 91 ஆயிரத்து 80 பேர் குறைந்த பட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.
இது தவிர, நேற்று பெரியவர்கள் மற்றும் இளையோருக்கு மொத்தம் 114, 553 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இதன்வழி தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் (பிக்) கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5 கோடியே 4 லட்சத்து 20 ஆயிரத்து 916 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான 21 லட்சத்து 97 ஆயிரத்து 961 இளையோர் அல்லது 69.8 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். அதே சமயம் 83.3 சதவீதம் பேர் அல்லது 26 லட்சத்து 22 ஆயிரத்து 306 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, மொத்தம் 20,370 ஊக்கத் தடுப்பூசிகள் நேற்று செலுத்தப்பட்டன இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 471,689 ஆக உயர்ந்துள்ளது.
HEALTH
நாட்டில் 95.7 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்
4 நவம்பர் 2021, 1:32 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

selangor
பள்ளி மாணவர்களிடையே மனநல விழிப்புணர்வை ஏற்படுத்த 'பியர்ஸ்' (PeerZ) திட்டம் அறிமுகம்
Shalini Rajamogun
18 ஜூன் 2026

national
'மைசலாம்' சமூகச் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 18 லட்சத்திற்கும் அதிகமான மலேசியர்கள் பயன்
Shalini Rajamogun
13 ஜூன் 2026

வகைhealth
உங்கள் கருத்து என்ன?



