ஷா ஆலம், செப் 25- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை இன்று சற்று குறைந்து 13,899 ஆனது. நேற்று இந்த எண்ணிக்கை 14,554 ஆக இருந்தது. சிலாங்கூரில் நேர்வுகளின் எண்ணிக்கை 2,341 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். சரவா மாநிலத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கையில் அதிக மாற்றம் இல்லை. நேற்று 2,825 ஆக இருந்த அந்த எண்ணிக்கை இன்று 2,712 ஆக பதிவானது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சம்பவங்களை பதிவு செய்த மாநிலங்களில் ஜோகூர் (1,377), கிளந்தான் (1,170), பேராக் (1,128) பினாங்கு (1,060) ஆகிய மாநிலங்கள் உள்ளன. இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு- சபா – 962 பகாங் – 779 திரங்கானு – 760 கெடா– 708 மலாக்கா– 339 கோலாலம்பூர் – 310 நெ செம்பிலான்– 194 புத்ரா ஜெயா – 37 பெர்லிஸ் – 17 லபுவான் – 5
ECONOMY
நாட்டில் கோவிட்-19 சம்பவங்கள் சற்று குறைந்து 13,889 ஆனது
25 செப்டெம்பர் 2021, 10:46 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருள் மற்றும் அடிப்படைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தீவிரம்
Shalini Rajamogun
10 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




