HEALTH

தேசிய கோவிட் நோய் தொற்று இன்று மீண்டும் உயர்ந்துள்ளது

24 செப்டெம்பர் 2021, 8:26 AM
தேசிய கோவிட் நோய் தொற்று இன்று மீண்டும் உயர்ந்துள்ளது

ஷா ஆலம், செப்டம்பர் 24: தினசரி கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை நேற்றைய 13,754 உடன் ஒப்பிடும்போது 14,554 தொற்றுகளுடன் சற்று அதிகரித்துள்ளது.

பேஸ்புக்கில் சுகாதார பொது இயக்குனரின் பகிர்தலின் அடிப்படையில், சிலாங்கூரில் புதிய நோய்த்தொற்றுகள் நேற்று 1,985 உடன் ஒப்பிடும்போது 2,244 தொற்றுகளாக அதிகரித்துள்ளன.

டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் பகிர்ந்த தரவுகளின்படி, சரவாக் அதிக எண்ணிக்கையிலான தினசரி நோய்த்தொற்றுகளை 2,825 உடன் பதிவு செய்துள்ளது மற்றும் லாபுவானில் புதிய தொற்றுகள் எதுவும் பதிவு செய்யப் படவில்லை.

மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களுக்கான தொற்று விவரங்கள் இங்கே:

 

ஜோகூர் - 1,807

சபா - 1,273

பினாங்கு - 1,231

பேராக் - 1,144

 

கிளந்தான் - 910

கெடா – 908

திராங்கானு - 690

பகாங் - 598

மலாக்கா - 401

 

கோலாலம்பூர் - 271

நெகிரி செம்பிலான் - 157

பெர்லிஸ் - 65

புத்ராஜெயா - 30

லாபுவான் - 0

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.