ECONOMY

நாட்டின் வயது வந்தோரில் 50.2 சதவீதம் அல்லது 11,743,096 பேர் கோவிட் -19 தடுப்பூசி ஊசி மருந்துகளை பெற்றுக்கொண்டனர், ​​

19 ஆகஸ்ட் 2021, 5:39 AM
நாட்டின் வயது வந்தோரில் 50.2 சதவீதம் அல்லது 11,743,096 பேர் கோவிட் -19 தடுப்பூசி ஊசி மருந்துகளை பெற்றுக்கொண்டனர், ​​

கோலாலம்பூர், ஆக19: நேற்றைய நிலவரப்படி, நாட்டின் வயது வந்தோரில் 50.2 சதவீதம் அல்லது 11,743,096 பேர் கோவிட் -19 தடுப்பூசி ஊசி மருந்துகளை பெற்றுக்கொண்டனர், ​​தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்டத்திற்கு (PICK) நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய மலேசியா சரியான பாதையில் செல்கிறது.

கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் உறுதியளிப்பு சிறப்பு குழு (JKJAV) இன்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் ஒரு இன்போகிராஃபிக் பகிர்வு மூலம் 75.3 சதவீதம் அல்லது 17,625,760 பேர் முதல் டோஸைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன்படி "இன்று, நாட்டில் வயது வந்தோரில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். நாங்கள் PICK க்கு நிர்ணயிக்கப் பட்ட இலக்கை அடைய சரியான பாதையில் செல்கிறோம். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்களை கூறிக்கொண்டது.

திட்டமிட்டப்படி, இந்த கடின உழைப்பு அனைத்தும் தொடர வேண்டும். JKJAV படி, நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 54 சதவீதம் பேர் முதல் டோஸைப் பெற்றனர், 36 சதவீதம் பேர் இரண்டு டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகளை முடித்தனர்.

இதற்கிடையில், தினசரி தடுப்பூசிகள் நேற்று 531,114 டோஸாக அதிகரித்துள்ளது, செவ்வாய்க்கிழமை 525,111 டோசுடன் ஒப்பிடும்போது, ​​188,474 முதல் டோஸாகவும், 342,640 இரண்டாவது டோஸாகவும் இருந்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.