ECONOMY

‘‘நோய்த் தொற்றுக் காலத்தில் சமர் மற்றும் விடுதலை’’ என்ற தலைப்பில் பேஸ்புக் யூடியூப் நிகழ்சி

18 ஆகஸ்ட் 2021, 3:31 AM
‘‘நோய்த் தொற்றுக் காலத்தில் சமர் மற்றும் விடுதலை’’ என்ற தலைப்பில்  பேஸ்புக் யூடியூப் நிகழ்சி

ஷா ஆலம், 18 ஆக: கடந்த ஆண்டு முதல் நாட்டை தாக்கிய கோவிட் -19 தொற்றுநோய் மலேசியாவில் பல்லின மக்களை ஒன்றிணைக்கும் அம்சத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட் -19 ஒரு பேரழிவாகக் கருதப்பட்டாலும், அது நாட்டில் ஒற்றுமையின் தருணம் என்று இனவியல் ஆய்வுக் கழகத்தின் முதன்மை உறுப்பினர்   யூ.கே.எம் பல்கலைக்கழக கெபாங்சான் மலேசியா (UKM)  பேராசிரியர் டத்தோ டாக்டர் தியோ கோக் சியோங் கூறினார்.

தடுப்பூசி மையத்தில் (பிபிவி) ஒரு உதாரணமாக  அளித்தார்,  அங்கு சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை பல்வேறு இனங்களில் இருப்பதை பார்க்க முடியும் ஆனால் அவர்களுக்கு இடையே பாகுபாடு காணப்படவில்லை. மதம் மற்றும் இனத்தைப் பொருட்படுத்தாமல் அரசு சாரா நிறுவனங்கள் யாருக்கும் உதவும் உணவு கூடை விநியோகத் திட்டத்தில் இருந்தும் இதைக் காணலாம்.

"தொற்றுநோய் உண்மையில் ஒரு பேரழிவு ஆனால் அது அனைவரையும் ஒன்றிணைக்கிறது, இவை நாட்டில் ஒற்றுமையின் தருணங்கள். நாங்கள் நிறைய பிளவுபட்டுள்ளோம்,  ஆனால் தொற்றுநோய் மற்றும் விளையாட்டு போட்டிகள் போன்றவைகள் ஒற்றுமையின் தருணம் என்பதை மறுக்க முடியாது, ”என்று அவர் கூறினார்.

அவர் இதை ‘‘நோய்த் தொற்றுக் காலத்தில் சமர் மற்றும் விடுதலை’’ என்ற தலைப்பில் சிலாங்கூர் டிவியின் பேஸ்புக் யூடியூப் நிகழ்சியில் அதனை தெரிவித்தார். சிலாங்கூர் டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.