ஷா ஆலம், ஜூலை 27- நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16,117 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் 207 பேர் இறந்துள்ளனர். நேற்று இந்த நோய்த் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,516 ஆக இருந்தது.சிலாங்கூர் மாநிலத்தில் நேற்று 6,508 ஆக இருந்த நேர்வுகளின் எண்ணிக்கை இன்று 6,616 ஆக உயர்வு கண்டுள்ளது.
கோலாலம்பூரில் இந்நோய்த் தொற்று எண்ணிக்கை 1,425 இல் இருந்து 2,457 ஆக உயர்வு கொண்டுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கெடாவில் 1,000 சம்பவங்களும் ஜோகூரில் 907 சம்பவங்களும் இன்று பதிவானதாக தனது முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதர மாநிலங்களில் நோய்த் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-
சபா(741), நெகிரி செம்பிலான்(669), மலாக்கா(674), பினாங்கு (618), கிளந்தான்(592), பேராக் (583), சரவா(405), பகாங்(403), திரங்கானு,(317), புத்ரா ஜெயா(122), லபுவான்(11), பெர்லிஸ்(2).
HEALTH
கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 16,117 ஆக அதிகரிப்பு
27 ஜூலை 2021, 2:11 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
மலேசியாவின் ஏற்பாட்டில் 17-ஆவது ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டம்
Bernama
2 செப்டெம்பர் 2026

national
தாதியர் பற்றாக்குறை நெருக்கடி: தீர்வு காண 3 திட்டங்களை வகுத்தது சுகாதார அமைச்சு
Bernama
15 ஆகஸ்ட் 2026

selangor
இல்திசாம் சிலாங்கூர் சுகாதாரத் திட்டம்: 6 மாதங்களில் RM17.15 மில்லியன் செலவு
Media Selangor Team
11 ஆகஸ்ட் 2026

national
5 சுளை டுரியான் ஒரு முழு வேளை உணவுக்குச் சமம்: உணவுமுறை நிபுணர் எச்சரிக்கை
Shalini Rajamogun
6 ஜூலை 2026

வகைhealth
உங்கள் கருத்து என்ன?



