ECONOMY

சிலாங்கூரில் புதிதாக ஐந்து நோய்த் தொற்று மையங்கள் கண்டுபிடிப்பு

23 ஜூலை 2021, 5:27 AM
சிலாங்கூரில் புதிதாக ஐந்து நோய்த் தொற்று மையங்கள் கண்டுபிடிப்பு

ஷா ஆலம், ஜூலை 23- சிலாங்கூரில்  நேற்று புதிதாக ஐந்து கோவிட்-19 நோய்த் தொற்று மையங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அவற்றில் நான்கு வேலையிடங்களை உட்படுத்தியவையாகும்.

கிள்ளான், பெட்டாலிங் ஜெயா, கோல சிலாங்கூர் மற்றும் உலு லங்காட்டில் இந்த தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

அந்த நான்கு வேலையிட தொற்று மையங்களின் வாயிலாக 578 பேர் நோய்த் தொற்றுக்கு இலக்கானது கண்டு பிடிக்கப்பட்டதாக  அவர் மேலும் சொன்னார்.

சிப்பாங்கிலுள்ள தனியார் உயர்கல்விக் கூடத்தை உட்படுத்திய நோய்த் தொற்று சம்பவத்தில்  20 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று நாடு முழுவதும் 32 புதிய தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்ட வேளையில் அவற்றில் 21 வேலையிடங்களை மையப்படுத்தியிருந்தது என்றார் அவர்.

ஏழு தொற்று மையங்கள் பொதுமக்கள் வாயிலாகவும் தலா இரு மையங்கள் தனியார் உயர்கல்விக் கூடங்கள் மற்றும்  கடும் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் மூலமாகவும் பரவியது என அவர் கூறினார்.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.