ECONOMY

கோவிட் -19 இறப்பு சிறப்பு உதவி- இறந்த 1, 232 நபர்களின் குடும்பங்களுக்கு RM6.16 மில்லியன்

23 ஜூலை 2021, 3:35 AM
கோவிட் -19 இறப்பு  சிறப்பு உதவி-  இறந்த 1, 232 நபர்களின்  குடும்பங்களுக்கு  RM6.16 மில்லியன்

புத்ராஜெயா, ஜூலை 22 - கோவிட் -19 இறப்பு மேலாண்மை சிறப்பு உதவி திட்டத்தின் கீழ், கொரோனா வைரஸால் இறந்த 1, 232 நபர்களின்  குடும்பங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நாட்மா) RM6.16 மில்லியனை அனுப்பியுள்ளது. .

பிரதமர் துறையின்  (சிறப்பு செயல்பாடுகள்) அமைச்சர் டத்தோ ஶ்ரீ மொஹமட் ரெட்ஜுவான் முகமட் யூசோஃப் கூறுகையில், 1,500 விண்ணப்பங்கள் மலேசியர்களால் சிறப்பு உதவிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

"இந்த உடனடி உதவி, குடும்பத்தின் சுமையை குறைப்பதாகும், ஏனெனில் இறந்தவர் வீட்டுத் தலைவராக இருந்திருக்கலாம்" என்று அவர் இன்று இங்குள்ள டேவான் செரோஜாவில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு (பிபிவி) வருகைபுரிந்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இறப்பு மேலாண்மை சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ், கோவிட் -19 க்கு பலியான நபர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் RM5,000 ஒரு முறை நிதி உதவி வழங்கப்படுகிறது.

300 விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனையில் உள்ளது என்றும், போதுமான தகவல்கள் இல்லாததால் சில நேரங்களில் சரிபார்ப்பு நேரம் எடுப்பதாகவும் அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.