ECONOMY

கோவிட்-19 வரலாற்றில் புதிய உச்சம்- நாட்டில் இன்று 13,215 சம்பவங்கள்

15 ஜூலை 2021, 1:28 PM
கோவிட்-19 வரலாற்றில் புதிய உச்சம்- நாட்டில் இன்று 13,215 சம்பவங்கள்

ஷா ஆலம், ஜூலை 15- நாட்டில் இன்று 13,215 கோவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கோவிட்-19 வரலாற்றில் அதிகப்பட்ச சம்பவங்களுடன் கருப்பு அத்தியாயத்தை இன்றைய தினம் பதிவு செய்துள்ளது.

கடந்த சில தினங்களாக நாடு பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கோவிட்-19 சம்பவங்களை பதிவு செய்த வேளையில் நேற்று இந்த எண்ணிக்கை 11,618 ஆக இருந்தது.

பிற மாநிலங்களைக் காட்டிலும் சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மொத்தம் 6,120 சம்பவங்கள் மாநிலத்தில் அடையாளம் காணப்பட்டன.

நெகிரில் செம்பிலானில் 1,603 சம்பவங்களும் கோலாலம்பூரில் 1,499 சம்பவங்களும் கெடவில் 695 சம்பவங்களும்  பினாங்கில் 509 சம்பவங்களும் இன்று  பதிவாகின.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.