HEALTH

பி40 பிரிவு பணியாளர்களின் பிள்ளைகளுக்கு 104 கணினிகள்- ஆயர் சிலாங்கூர் வழங்கியது

15 ஜூலை 2021, 11:16 AM
பி40 பிரிவு பணியாளர்களின் பிள்ளைகளுக்கு 104 கணினிகள்- ஆயர் சிலாங்கூர் வழங்கியது

ஷா ஆலம், ஜூலை 15- பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு ஆயர் சிலாங்கூர் சென்.பெர்ஹாட் நிறுவனம் 104 கணினிகளை வழங்கியது.

மடிக்கணினிகள், கையடக்க கணினிகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட கைப்பேசிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் தங்கள் கல்வியை இயங்கலை வாயிலாக தொடர வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு இந்த உதவி வழங்கப்பட்டதாக அது தெரிவித்தது.

மேலும், மாணவர்களின் வசதிக்காக 12 மாதங்களுக்கான இணைய தரவு வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் மேலும் கூறியது.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.