ECONOMY

பிரதமரின் வருகையினால் அவசர சிகிச்சை பிரிவு காலி செய்யப்பட்டதா? கிள்ளான் மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு

14 ஜூலை 2021, 5:57 AM
பிரதமரின் வருகையினால் அவசர சிகிச்சை பிரிவு காலி செய்யப்பட்டதா? கிள்ளான் மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு

ஷா ஆலம், ஜூலை 14- பிரதமர் டான்ஸ்ரீ  மொகிடின் யாசினின் வருகையையொட்டி கிள்ளான் கிள்ளான், துங்கு  அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பரிவு “காலி செய்யப்பட்டதாக“ கூறப்படுவதை  மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

பிரதமரின் வருகையின் போது அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் நிறைந்து காணப்பட்டதோடு 177 நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருந்ததாக மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஜூல்கர்னாய்ன் முகமது ராவி கூறினார்.

தற்போதைய நிலவரப்படி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கட்டில்களின் பயன்பாடு 150 முதல் 180 வரை உள்ளது என்று அவர் சொன்னார்.

அவசரகால நடவடிக்கையாக கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஏ.சி.சி. எனப்படும் தினசரி சிகிச்சை மையத்தை கோவிட்-19  நோயாளிகளுக்கான வார்டாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.